தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிறுத்தை நடமாடுவதாக சமூக வலைதளங்களில் வைரல் * வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை * வனத்துறையினர் எச்சரிக்கை அணைக்கட்டு அடுத்த அப்புக்கல் கிராமத்தில்

பள்ளிகொண்டா, அக்.7: அணைக்கட்டு அடுத்த அப்புக்கல் கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கடந்த சில நாட்களாக சமூக வலை தளங்களில் வதந்தி பரப்பி வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவில் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் மலைப்பகுதிகளையொட்டி உள்ளன. இந்நிலையில், மலைப்பகுதிகளில் இருந்து அவ்வப்போது, காட்டு பன்றிகள், எருமைகள் ஊருக்குள் உள்ள விவசாயி பகுதிகளுக்கு வந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. மேலும், தண்ணீர் தேடி அதிகளவில் மான்கள் கிராமங்களில் தஞ்சம் அடைகின்றன.

Advertisement

அதனை வனத்துறையினர் அவ்வப்போது நடவடிக்கைகள் மேற்கொண்டு பாதுகாப்பாக மீட்டு காப்பு காடுகளில் விட்டு விடுகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக அணைக்கட்டு அடுத்த அப்புக்கல் மற்றும் அதனையொட்டியுள்ள மானியக்கொல்லை கிராமங்களில் சிறுத்தை ஒன்று நுழைந்து வலம் வருவதாக வாட்ஸ் அப் குரூப்களில் தகவல்கள் வேகமாக பரவி வந்தன. அப்போது, வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, நாங்களும் தகவலறிந்து சம்பந்தப்பட்ட இடத்தில் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.

சிறுத்தை நடமாட்டத்திற்கான எந்தவொரு அறிகுறியும் தென்படவில்லை. மேலும், இதுபோன்று தவறான வீண் வதந்திகளை சமூக வலைதளம் மூலம் பரப்பி வருவதால் தேவையில்லாமல் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் மற்றும் அணைக்கட்டு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடர்ந்து சமூக வலை தளத்தில் வீண் வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement