தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வீடுபுகுந்து தம்பதியை தாக்கி நகை, பணம் கொள்ளை முகமூடி ஆசாமிகளுக்கு போலீஸ் வலை காட்பாடியில் இரவு பரபரப்பு

வேலூர், அக்.7: காட்பாடியில் இரவு வீடுபுகுந்து தம்பதியை தாக்கி நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற முகமூடி ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். காட்பாடி அடுத்த ஜாப்ராபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன், விவசாயி. இவருடைய மனைவி சாந்தம்மாள். இவர்கள் நேற்று முன்தினம் இரவு வீட்டில் அமர்ந்திருந்தனர். அப்போது, முகமூடி அணிந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென வீட்டில் புகுந்தது. அங்கு தனியாக இருந்த தம்பதியரை தாக்கினர். பின்னர் சாந்தம்மாள் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலி மற்றும் காதில் அணிந்திருந்த கம்மல் ஆகியவற்றை பறித்துக்கொண்டு, வீட்டில் இருந்த ரூ.85 ஆயிரம் கொள்ளையடித்து கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்றனர்.

Advertisement

முகமூடி கொள்ளையர்கள் சென்ற பிறகு விவசாய தம்பதியினர் கூச்சலிட்டனர். இதனைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து காயமடைந்து இருந்த இருவரையும் மீட்டு வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விருதம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் டிஎஸ்பி பழனி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விவசாய தம்பதியினரிடம் விசாரணை நடத்தினர். சம்பவ இடத்திற்கு மோப்பநாய் டோரா வரவழைக்கப்பட்டு கொள்ளை சம்பவம் நடந்த இடத்தை மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடியது ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா உள்ளதா என போலீசார் ஆய்வு செய்தனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement