தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

104 அரசு பள்ளிகளுக்கு புதிய காஸ் அடுப்பு எம்எல்ஏ வழங்கினார் அணைக்கட்டு ஒன்றியத்துக்குட்பட்ட

அணைக்கட்டு, டிச.5: அணைக்கட்டு ஒன்றியத்துக்குட்பட்ட 104 அரசு பள்ளிகளுக்கு புதிய காஸ் அடுப்பை எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் வழங்கினார். அணைக்கட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை மற்றும் நிதி உதவிபள்ளி, வனத்துறை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவு சமைத்து வழங்குவதற்கு சமூக நலத்துறை மூலம் வழங்கப்பட்ட காஸ் அடுப்புகளை பள்ளி சத்துணவு அமைப்பாளர்களிடம் வழங்கும் நிகழ்ச்சி பிடிஓ அலுவலகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். பிடிஓக்கள் வினோத்குமார், செல்வகுமார் வரவேற்றனர். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேசன், குமரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement

இதில் எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அணைக்கட்டு ஒன்றியத்தில் உள்ள 104 அரசு பள்ளி மற்றும் அரசு நிதி உதவி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவு சமைப்பதற்காக காஸ் அடுப்புகளை சத்துணவு அமைப்பாளர்களிடம் வழங்கினார். அப்போது எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் கூறுகையில், ‘மேல்அரசம்பட்டு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் உள்ள சத்துணவு கூடத்தை ஆய்வு செய்தேன், அப்போது விறகு அடுப்பு மூலம் சமைப்பது தெரியவந்தது. இதையடுத்து ஒன்றியம் முழுவதும் எத்தனை பள்ளிகளில் விறகு அடுப்பு மூலம் சமைக்கிறார்கள் என கணக்கெடுப்பு செய்து, விறகு அடுப்பு மூலம் சமைக்கும் பள்ளிகளுக்கு கேஸ் அடுப்பு வழங்கப்பட்டது என்றார். அப்போது துணை பிடிஓ (சத்துணவு) பூங்கோதை, மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணமேனன், ஒன்றிய கவுன்சிலர்கள் பிரகாஷ், குமார், கணபதி, கணேசன், ரமேஷ், கோபி, பாஸ்கர், நியமன உறுப்பினர் முருகேசன், சுப்புராயன், ஒன்றிய துணை செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட பிரதிநிதி அஸ்லாம், ஊராட்சி தலைவர்கள் திலகவதி சாரதி, செந்தில்குமார், திமுக இளைஞரணி அமைப்பாளர் புருஷோத்தமன், மாணவர் அணி அமைப்பாளர் ஹரிபிரசாத் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Advertisement