தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மலைப்பாதை வழியாக காரில் கஞ்சா கடத்திய இருவர் கைது கார் பறிமுதல் ஆந்திராவில் இருந்து அரவட்லா

பேரணாம்பட்டு,நவ.5: ஆந்திராவில் இருந்து அரவட்லா மலைப்பாதை வழியாக காரில் கஞ்சா கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா மலைப்பகுதி ஏழு வளைவுகள் கொண்டு அமைந்துள்ளது. இந்த மலைப்பாதையின் வழியாக ஆந்திர மாநிலத்தில் இருந்து காரில் கஞ்சா கடத்துவதாக குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் குடியாத்தம் மதுவிலக்கு உதவி ஆய்வாளர் எழில் வேந்தன், தலைமை காவலர்கள் பார்த்திபன், அறிவழகன், சதீஷ்குமார் மற்றும் போலீசார் கார்த்தி ஆகியோர் மலைப்பகுதியில் உள்ள பாஸ்மார்பெண்டா கிராமத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

Advertisement

அப்போது அவ்வழியாக கார் ஒன்று அதிவேகமாக வந்து நிற்காமல் சென்றது. இதில், சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரை நான்கு கி.மீ. தூரம் மலைப்பாதை வழியாக துரத்திச் சென்று மடக்கி பிடித்தனர். பின்பு காரில் சோதனை செய்தபோது, சுமார் 250 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.மேலும், விசாரணையில், ஆம்பூர் கோவிந்தாபுரத்தை சேர்ந்த சபரி ராம் (24,) வெங்கடசமுத்திரம் பகுதியை சேர்ந்த தினகரன்(25) என்பதும் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா விற்பதற்காக வாங்கி வந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து, கார் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்து குடியாத்தம் கிளைச்சிறையில் அடைத்தனர்.

Advertisement

Related News