தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாலியல் தொல்லை கொடுத்த கணவன், மனைவிக்கு சிறை தண்டனை வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு ஆற்காடு அருகே 7 வயது சிறுமிக்கு

வேலூர், ஜூலை 13: ஆற்காடு அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணவன், மனைவிக்கு சிறை தண்டனை விதித்து வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த லாடாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் காங்கேயன்(36), இவரது மனைவி விஜயலட்சுமி(34). இவர்கள் ஒரு பெட்டிக் கடை வைத்துள்ளனர். இவர்களது கடைக்கு கடந்த 2016ம் ஆண்டு ஜூலை 9ம் தேதி 7வயது சிறுமி பொருள் வாங்க சென்றுள்ளார். அப்போது கல்லா பெட்டியில் பணம் திருடிவிட்டதாக கூறி அந்த சிறுமியை கணவன், மனைவி இருவரும் வீட்டிற்கு அழைத்து சென்று சிறுமி அணிந்து இருந்த ஆடையை கழற்றி சோதனை செய்துள்ளனர்.

Advertisement

மேலும் பாலியல் தொல்லை கொடுத்து அதை செல்போனில் போட்டோக்கள் எடுத்துள்ளனர். மேலும் வெளியே சொன்னால் இந்த போட்டோக்களை எல்லோருக்கும் காட்டிவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். தொடர்ந்து அவர்கள் மிரட்டி வந்ததால் பெற்றோரிடம் அந்த சிறுமி நடந்த விவரங்களை தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுகுறித்து ஆற்காடு தாலுகா போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து கணவன், மனைவி இருவரையும் கைது செய்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கு நீதிபதி சிவக்குமார் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில், தீர்ப்பளித்த நீதிபதி சிவக்குமார், காங்கேயன் என்பவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ₹5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும், அவரது மனைவி விஜயலட்சுமிக்கு 18 மாதங்கள் சிறை தண்டனையும் ₹2500 அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 2 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞர் சந்தியா வாதாடினார்.

Advertisement

Related News