தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

₹2.15 கோடியில் புத்துயிர் பெறும் வேலூர் மாவட்ட மைய நூலகம் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது வாசகர்களுக்கு வட்ட வடிவ மேஜைகளுடன்

வேலூர், ஜூன் 8: வாசகர்களுக்கு வட்ட வடிவ மேஜைகளுடன் ₹2.15 கோடியில் வேலூர் மாவட்ட மைய நூலகம் புத்துயிர் பெறுகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. வேலூர் மாவட்டத்தில் மாவட்ட மைய நூலகத்தின் கீழ் ஊர்புற நூலகம், நகர்ப்புற நூலகம் என்று நூற்றுக்கும் மேற்பட்ட நூலகங்கள் இயங்கி வருகிறது. இந்த நூலகங்களுக்கு தேவையான நூல்கள் அனைத்து மாவட்ட மைய நூலகங்கள் மூலம் வாங்கப்பட்டு, அந்தந்த நூலகங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்கான புத்தகங்கள் அனைத்து மாவட்ட மைய நூலகத்தில் உள்ள கட்டிடத்தில் தான் வைக்கப்படுகிறது.

Advertisement

மேலும் மாவட்ட மைய நூலகத்தில் தமிழ், ஆங்கிலம், கட்டுரை, கவிதை, வரலாறு, ஆராய்ச்சி புத்தகங்கள், போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் உட்பட லட்சக்கணக்கான புத்தகங்கள் வாசகர்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது. தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட வாசகர்கள் நூலகத்திற்கு வந்து பயன்பெற்று வருகின்றனர். அந்த வகையில் மாவட்ட மைய நூலகத்தில் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான நூலகங்கள் இருக்கும். இப்படி முக்கியத்துவம் வாய்ந்த இந்த நூலகக்கட்டிடம் மழைக்காலங்களில் சீலிங் வலுவிழந்து மழைநீர் கசிவு ஏற்பட்டது.

அதேபோல் தரைப்பகுதியிலும் மழைநீர் ஈரம் படிந்திருந்தது. எனவே மாவட்ட மைய நூலகத்தை புதுப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது. இதையடுத்து அரசு உத்தரவின்பேரில் மாவட்ட மைய நூலகத்தினை புனரமைக்க ₹2.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி வேலூர் மாவட்ட மைய நூலகத்தில் சீலிங்க், டைல்ஸ், மின் ஒயர்கள், ஏசி வசதி என்று மாற்றப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதோடு வாசகர்கள் பயில்வதற்கு வட்டவடிவிலான மேஜை என்று புதுப்பொலிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். தற்போது வாசகர்கள் பயில்வதற்கும், போட்டி தேர்வுகளுக்கு என்று பயில்வதற்கு இடவசதியுடன் இயங்கி வருகிறது என்று நூலகப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Related News