தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பேரணாம்பட்டு கொட்டாற்றில் வெள்ளப்பெருக்கு வேலூர் கலெக்டர் எச்சரிக்கை

வேலூர், மே 21: வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு தாலுகா கொட்டாற்றில் மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கொட்டாறு பகுதியில் வசிக்கும் மக்கள் நீர்வரத்து கால்வாய்களில் செல்ல வேண்டாம் என கலெக்டர் சுப்புலட்சுமி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம், பத்தலப்பல்லி ஊராட்சி சின்னாறு பகுதியிலும், எருக்கம்பட்டு ஊராட்சி கோட்டையூர் பெரிய கணவாய் பகுதியிலும் மற்றும் சாத்கர் ஊராட்சி கொட்டாற்றிலும் மழையின் காரணமாக அதிகளவில் தண்ணீர் வெளியேறி வருகிறது. எனவே, கொட்டாற்று கரையில் உள்ள ரங்கம்பேட்டை, குண்டலபல்லி, சாத்கர், அருந்ததியர் காலனி, ஒத்தவாடை தெரு, ஏரிகுத்தி மேடு, ஆயக்கார வீதி, ரஷீதாபாத், பண்டாரவடை, கொத்தபல்லி பகுதிகளில் வசிக்கும் மக்கள் சின்னாறு, கோட்டையூர் பெரிய கணவாய் பகுதிகள் மற்றும் கொட்டாற்றில் இறங்கி செல்லவோ அல்லது சிறார்கள் மற்றும் குழந்தைகளை விளையாடவோ அனுமதிக்கக் கூடாது. வேலூர் மாவட்டத்தில் கோடை மழை பரவலாக பெய்து வருவதால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் மழைநீர் வெளியேறும் கால்வாய்கள், ஏரிக்கால்வாய் பகுதி, குளம், குட்டை, ஏரி மற்றும் ஆற்று பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement