தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இலங்கை தமிழர்களில் 120 தம்பதிகளின் திருமணங்கள் பதிவு அதிகாரிகள் தகவல் வேலூரில் நடந்த முகாமில்

வேலூர், ஜூலை 29: வேலூர் பதிவு மண்டலத்தில் நடந்த சிறப்பு முகாமில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த 120 தம்பதிகளின் திருமணங்கள் பதிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் நடைபெறும் திருமணங்கள் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி, 2018 டிசம்பர் 10ம் தேதி முதல் திருமணம் செய்தோர் இணையதளம் வழியாக திருமணப் பதிவுகளை மேற்கொள்ள பதிவுத்துறை நடவடிக்கை மேற்கொண்டது. இதற்காக கடந்த 26ம் தேதி 7 மண்டலங்களில் உள்ள 30க்கும் மேற்பட்ட சார் பதிவாளர் அலுவலகங்களில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களை சேர்ந்த புதுமண தம்பதிகள் தங்கள் திருமணத்தை பதிவு செய்தனர். அதன்படி, வேலூர் பதிவு மண்டலத்தில், கடந்த 26ம் தேதி வேலூர், குடியாத்தம், வந்தவாசி, ஆரணி, திருவண்ணாமலை, செய்யாறு, கலசப்பாக்கம், களம்பூர், நெமிலி, வாலாஜா, ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய சார் பதிவாளர்கள் அலுவலகத்தில் 206 திருமணங்கள் பதிவு செய்ய சிறப்பு முகாமில் அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் 120 தம்பதிகள் தங்களது திருமணங்களை பதிவு செய்துள்ளதாக பதிவு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement