தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்றவர் கைது: அணைக்கட்டு அருகே மளிகை கடையில்

அணைக்கட்டு, ஆக. 11:அணைக்கட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாராயணபுரம் பகுதியில் பெட்டிக் கடைகளில் சிலர் டாஸ்மாக் மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதாக மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து விடுமுறை நாட்களில் அதிக அளவில் வியாபாரம் நடப்பதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்ததையடுத்து நேற்று சப் இன்ஸ்பெக்டர் தர்மன் மற்றும் போலீசார் நாராயணபுரம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

Advertisement

அப்போது அங்குள்ள மளிகை கடையில் சோதனை செய்தபோது மதுபான பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்த மதுபான பாட்டில்கள் மற்றும் கடையின் உரிமையாளரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து நடத்திய விசாரணையில் ஊனை வாணியம்பாடி அடுத்த நாராயணபுரம் காதர்நகரை சேர்ந்த கோவிந்தன் (48) பெட்டிக்கடை, மளிகை பங்க் கடை நடத்தி வந்ததும். அந்தப் பெட்டிக்கடையில் அரசு டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து கோவிந்தனை கைது செய்த போலீசார் அவர் விற்பதற்காக பதுக்கி வைத்திருந்த 10 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதே போல் அந்த பகுதியில் வேறு ஏதாவது பெட்டிக்கடைகளில் மது பாட்டில்கள் பதுக்கி விற்கப்படுகிறதா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement