தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விபத்தில் இறந்த நெசவுத்தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.16 லட்சம் நிவாரணம்: அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு நீதிமன்றம் உத்தரவு

வேலூர், டிச.4: சோளிங்கர் அருகே பஸ் மோதி இறந்த நெசவுத்தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.16 லட்சம் இழப்பீடு வழங்க வேலூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. வேலூர் மாவட்டம் அலமேலுமங்காபுரத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(54). நெசவுத்தொழிலாளி. இவர் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10ம் தேதி ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் இருந்து அரக்கோணம் நோக்கி டூவீலரில் சென்று கொண்டிருந்தார். சோளிங்கர் அருகே வேடல் கிராமம் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த அரசு பஸ் ராமச்சந்திரன் டூவீலர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

Advertisement

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்நிலையில் தனது கணவர் இறப்புக்கு இழப்பீடு வழங்கக் கோரி, வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோரும் தீர்ப்பாயத்தில் ராமச்சந்திரனின் மனைவி வசந்தா வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சாண்டில்யன், மனுதாரரின் கணவர் இறப்புக்கு பஸ்சை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இயக்கியதே காரணம் என்பது தெளிவாகிறது. எனவே மனுதாரர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடாக ரூ.16 லட்சத்தை ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் சேர்த்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Advertisement

Related News