தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காதல் திருமணம் செய்த பெண்ணை தாக்கி காரில் கடத்தல்:போலீசார் விசாரணை

வேலூர், செப்.3: வேலூரில் காதல் திருமணம் செய்த பெண் மற்றும் அவரது மாமியாரை தாக்கி காரில் கடத்தியவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.வேலூர் அடுத்த அரியூர் அண்ணா நகரை சேர்ந்தவர் சூரியகாந்தி. இவரது மகன் பூர்ணம். அரியூர் திருமலைக்கோடி விஸ்வநாதன் நகரை சேர்ந்தவர் குமரேசன்(45). இவரது மகள் லாவண்யா. இதில் லாவண்யாவும், பூர்ணமும் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெண்ணின் தரப்பில் எதிர்ப்பு இருந்ததால் கடந்த மாதம் 25ம் தேதி காதல்ஜோடி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

Advertisement

இந்நிலையில் கடந்த 31ம் தேதி லாவண்யா, அவரது மாமியார் சூரியகாந்தி இருவரும் பொய்கை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய சர்வீஸ் சாலையில் ஆட்டோவில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த லாவண்யாவின தந்தை குமரேசன், வேலு(48), வேலரசன்(34), சதீஷ்(32) ஆகியோர் வழிமறித்து லாவண்யாவையும், அவரது மாமியார் சூரியகாந்தியையும் சரமாரியாக தாக்கினார்களாம்.

பின்னர் இருவரையும் காரில் ஏற்றிக் கொண்டு அப்துல்லாபுரம் விமான நிலையம் வழியாக ஊசூர் நோக்கி சென்றனர். இதில் சூரியகாந்தியை மட்டும் விமான நிலையம் அருகே காரில் இருந்து இறக்கி விட்டனர். லாவண்யாவை காரில் கடத்திச் சென்றுள்ளனர். இதுகுறித்து சூரியகாந்தி கொடுத்த புகாரின் பேரில் அரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலரசனை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர்.

Advertisement

Related News