தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போதை வாலிபருக்கு பொதுமக்கள் தர்மஅடி பஸ் கண்டக்டரை தாக்கிய

பள்ளிகொண்டா, செப்.2: பள்ளிகொண்டா அருகே பஸ் கண்டக்டரை தாக்கிய போதை வாலிபருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் குடியாத்தம் நோக்கி நேற்று மதியம் 2.15 மணியளவில் புறப்பட்டு சென்றது. குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை, காத்தாடிகுப்பம் கிராமத்தை சேர்ந்த டிரைவர் ராஜேஷ்(32), அரியூர் அடுத்த குப்பம் கிராமத்தை சேர்ந்த கண்டக்டர் கார்த்திகேயன்(25) ஆகியோர் பணியில் இருந்தனர். பொய்கை அருகே கண்டக்டர் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்க நடந்து சென்றுள்ளார். அப்போது, குடியாத்தம் அடுத்த ராமாலை பகுதியை சேர்ந்த ஜெகதீசன்(25) என்பவர் காலை நீட்டிக்கொண்டு இடையூறாக இருந்துள்ளார்.

Advertisement

மேலும், அவரது நண்பர்கள் சரத்குமார்(25), பிரசாந்த்(23) ஆகிய இருவரும் போதையில் தகாத வார்த்தைகள் பேசிக்கொண்டு வந்துள்ளனர். அவர்களிடம் கண்டக்டர் அமைதியாக பயணம் செய்யுங்கள் என கூறியுள்ளார். அப்போது, போதையில் இருந்த ஜெகதீசன் கண்டக்டர் கார்த்திகேயனை தகாத வார்த்தைகளால் திட்டி திடீரென கன்னத்தில் பளார் விட்டுள்ளார். பின்னர், இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அவர்களை விலக்கி விட்ட பயணிகள், கண்டக்டரை தாக்கிய ஜெகதீசனுக்கு தர்மஅடி கொடுத்து 3 பேரையும் பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர், புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News