தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விபத்தில் உயிரிழந்த லோடு மேன் குடும்பத்தினருக்கு ரூ.7.14 லட்சம் இழப்பீடு: வேலூர் கோர்ட் உத்தரவு

வேலூர், செப்.2: விபத்தில் உயிரிழந்த லோடு மேன் குடும்பத்தினருக்கு ரூ.7.14 லட்சம் இழப்பீடு வழங்க வேலூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. வேலூரை சேர்ந்தவர் மாணிக்கம் என்கிற முத்துமாணிக்கம்(45), லோடு மேன். இவர் கடந்த 2008ம் ஆண்டு ஜனவரியில் ஆந்திரா மாநிலம், ஜனகரப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையை கடந்துள்ளார். அப்போது அந்த வழியாக அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் சென்ற ஆட்டோ மாணிக்கம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Advertisement

இந்நிலையில் தனது தந்தை இறப்புக்கு இழப்பீடு வழங்கக் கோரி மாணிக்கத்தின் 2 மகன்கள் மற்றும் மகள் வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை நீதிபதி சாந்தி விசாரித்தார். வழக்கு விசாரணையில் மனுதாரர்களின் தந்தை இறப்புக்கு, ஆட்டோவை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இயக்கியதே காரணம் என்பது தெரியவந்தது. எனவே, மனுதாரர்களுக்கு இழப்பீடாக ரூ.7.14 லட்சம், ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன், 2010ம் ஆண்டு முதல் கணக்கிட்டு ஒரு மாதத்தில் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement

Related News