தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேளாங்கண்ணிக்கு மாலை போட்டதால் மதுபானம் அருந்துவதற்கு பதிலாக போதை ஊசி செலுத்திய வாலிபர்: ஆபத்தான நிலையில் சிகிச்சை

பெரம்பூர்: வேளாங்கண்ணிக்கு மாலை போட்டதால் மது அருந்துவதற்கு பதிலாக போதை ஊசி செலுத்திய வாலிபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.புளியந்தோப்பு கனகராஜ் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (22), கூலி தொழிலாளி. இவரது மனைவி யுவராணி (20). இவர்களுக்கு, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. போதைக்கு அடிமையான பாஸ்கர், தற்போது வேளாங்கண்ணி கோயிலுக்கு மாலை அணிந்து விரதம் இருப்பதால், மது அருந்தாமல் இருந்துள்ளார்.
Advertisement

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டிற்கு வந்த பாஸ்கர், சற்று நடுக்கமாக உள்ளது எனக் கூறியுள்ளார். சிறிது நேரத்தில் மயக்கமடைந்து கீழே விழுந்தார். அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் பாஸ்கருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பேசின்பிரிட்ஜ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், பாஸ்கர் வலி நிவாரணி மாத்திரையை தண்ணீரில் கலந்து தனக்குத்தானே ஊசி மூலம் உடலில் செலுத்திக் கொண்டது தெரிய வந்தது.

மேலும் வேளாங்கண்ணிக்கு மாலை அணிந்துள்ளதால் மது குடிக்க கூடாது என்பதற்காக, ரயில் மூலம் ஆந்திர மாநிலம் விஜயவாடா சென்று, போதை மாத்திரைகளை வாங்கி வந்துள்ளார். 3 நாட்களுக்கு முன்பு ஒரு மாத்திரையை கரைத்து ஊசி மூலம் செலுத்திக்கொண்டார். மீண்டும் ஒரு மாத்திரையை கரைத்து செலுத்தியபோது அவருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Related News