தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் நிரந்தர உண்டியல்களில் ரூ.40.48 லட்சம் வசூல்

தேனி, ஜூன் 6: தேனி அருகே வீரபாண்டியில் உள்ள கவுமாரியம்மன் கோயிலில் வைக்கப்பட்டிருந்த நிரந்தர உண்டியல்கள் நேற்று எண்ணப்பட்டன. இதில் ரூ.40.48 லட்சம் வசூலானது. தேனி அருகே வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற கவுமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் இறுதி எட்டு நாட்கள் சித்திரை திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். எட்டு நாள் திருவிழாவில் தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கோயிலுக்கு வந்து அம்மனை தரிசித்து செல்வர்.

இதன்படி, இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா கடந்த 6ம் தேதி தொடங்கி கடந்த 13ம் தேதி வரை நடந்தது. இக்கோயிலில் நிரந்தரமாக 12 உண்டியல்கள் வைக்கப்பட்டிருக்கும். திருவிழா காலத்தில் நிரந்தர உண்டியல்கள் தவிர 22 தற்காலிக உண்டியல்கள் வைக்கப்பட்டன. இத்தகைய தற்காலிக உண்டியல்கள் மட்டும் கடந்த மாதம் 26ம் தேதி எண்ணப்பட்டன. அந்த 22 உண்டியல்களில் ரூ.11 லட்சத்து 15 ஆயிரத்து 840 இருந்தது. இதனைத்தொடர்ந்து நேற்று கோயில் வளாகத்தில் நிரந்தர 12 உண்டியல்கள் எண்ணும் பணியானது இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ஜெயதேவி தலைமையில், கோயில் செயல்அலுவலர் நாராயணி,

இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் கார்த்திகேயன், கோயில் மேலாளர் பாலசுப்பிரமணியன், கணக்கர் பழனியப்பன் முன்னிலையில் நடந்தது. இப்பணியில் வீரபாண்டி சவுராஷ்டிரா கல்வியியல் கல்லூரி ஆசிரிய மாணவியர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். உண்டியல் எண்ணிக்கை முடிவில், 12 உண்டியல்களில் ரூ. 40 லட்சத்து 45 ஆயிரத்து 383 இருந்தது. தங்கம் 30 கிராமும், வெள்ளி 702 கிராமும் இருந்தது.

Related News