தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சேறும் சகதியுமாக மாறிய விசி காலனி சாலை

 

ஊட்டி, ஜூலை 10: ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட விசி காலனி பகுதிக்கு செல்லும் சாலை, சேறும் சகதியுமாக மாறியுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட விசி காலனி பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இப்பகுதிக்கு செல்லும் மக்கள், பிங்கர்போஸ்ட் பகுதியில் இருந்து விசி காலனி செல்லும் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இச்சாலையில், முனீஸ்வரர் கோயில் பகுதியில் சேறும், சகதியும் நிறைந்து சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் இச்சாலையில் செல்லும் பள்ளி குழந்தைகள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும், இரவு நேரங்களில் இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறிவிழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. சில சமயங்களில் வாகனங்களில் செல்பவர்கள் சேற்றை வாரி அடிப்பதால், சாலை ஓரங்களில் நடந்து செல்பவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இச்சாலையை சீரமைக்ககோரி பொதுமக்கள் மற்றும் இப்பகுதி நகரமன்ற உறுப்பினர் வலியுறுத்தி வந்த போதிலும் நகராட்சி நிர்வாகம் இதனை கண்டுகொள்ளாமல் உள்ளது. எனவே சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.