தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஓசூர் காமாட்சி அம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா

ஓசூர், ஜூலை 6: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பாரதிதாசன் நகரில், கல்யாண காமாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் வருஷாபிஷேக நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், 16வது ஆண்டு வருஷாபிஷேக நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. முன்னதாக யாக சாலை அமைத்து ஆயுஷ்ய ஹோமம் நடைபெற்றது. இதில் முதலில் குழந்தைகள் சங்கல்பங்கள் செய்தனர். இதனைத் தொடர்ந்து கலசங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்தவாறு வலம் வந்தனர். பின்னர், 108 குழந்தைகள் வரிசையாக நின்று, ஒவ்வொருவரும், உற்சவ மூர்த்திகளான கல்யாண காமாட்சி மற்றும் ஏகாம்பரேஸ்வரருக்கு பால், தயிர், வெண்ணெய், நெய், சந்தனத்தால் அபிஷேகம் செய்தனர். இந்நிகழ்ச்சியில், ஓசூர் மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் பெற்றோர்கள் குழந்தைகளுடன் சுவாமியை தரிசனம் செய்தனர். ெதாடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

Related News