தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வனக்காளி அம்மன் கோயில் விழா

கிருஷ்ணகிரி, ஆக.12: கிருஷ்ணகிரி அடுத்த சின்னமோட்டூர் கிராமத்தில் வனக்காளி அம்மன் கோயில் 4ம் ஆண்டு ஆடி பெருவிழா நடந்தது. கிருஷ்ணகிரி அடுத்த கிட்டம்பட்டி அருகேயுள்ள சின்னமோட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள, வனக்காளி அம்மன் கோயில் 4ம் ஆண்டு ஆடி பெருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை 6 மணிக்கு, கணபதி ஹோமம், கங்கனம் கட்டுதல், காப்பு கட்டுதல், கொடி ஏற்றுதல் மற்றும் அம்மனுக்கு மாலை போடுதல் ஆகியவை நடந்தது.

Advertisement

தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. பகல் 12 மணிக்கு, கங்கையில் கரகம் அலங்காரம் செய்து அம்மன் உற்சவ சுவாமியுடன், தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். பக்தர்கள் காளி, அம்மன் வேடம் அணிந்தும், தீச்சட்டி எடுத்தும், கரகம் சுமந்தும் வந்தனர். சுவாமி நகர் வலம், கிட்டம்பட்டி மேம்பாலம் வரை சென்று பின்னர் கோயில் வளாகத்திற்கு திரும்பியது. அங்கு பகல் 1 மணிக்கு, தீமிதி விழா நடந்தது. திரளான பக்தர்கள் குண்டம் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினர். ஏற்பாடுகளை அகசிப்பள்ளி பொதுமக்கள் செய்திருந்தனர்.

Advertisement