தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேன் கவிழ்ந்து விபத்து: வேன் கவிழ்ந்து விபத்து

 

Advertisement

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே, பெயர்சூட்டு விழாவிற்கு சென்றபோது வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பெண்கள் உள்பட 11 பேர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. ஊத்துக்கோட்டை அருகே, கூனிப்பாளையத்தைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகள் அஸ்வினியை பிளேஸ்பாளையத்தைச் சேர்ந்த லாசர் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார். தம்பதியருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இக்குழந்தைக்கு பெயர் சூட்டுவிழா கூனிபாளையத்தில் உள்ள ரவியின் வீட்டில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, லாசர் பிளேஸ்பாளையத்தைச் சேர்ந்த தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். தொடர்ந்து, பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிளேஸ்பாளையத்தைச் சேர்ந்த வள்ளியம்மாள் (45), ஜெயக்கொடி (40), பவானி (30), மனோ (50), டில்லிகாந்தா (70), நாகம்மாள் (64), குஜாலா (60), ஜோதி (60), ரமணி (48) மற்றும் தனபால் (48) ஆகியோர் சுற்றுலா வேன் ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு புறப்பட்டனர்.

இந்த வேனை பிளேஸ்பாளையத்தை சேர்ந்த டில்லி (30) என்பவர் ஓட்டிச்சென்றார். பிளேஸ்பாளையத்தில் இருந்து புறப்பட்ட வேன் கொல்லபாளையம் பகுதியில் கொண்டைஊசி வளைவில் திரும்பியபோது எதிர்பாராத விதமாக கவிழ்ந்தது. இதில், 10 பெண்கள் உள்பட 11 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த பென்னாலூர்பேட்டை எஸ்.ஐ. வேலு மற்றும் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் டிரைவர் டில்லி காயமின்றி தப்பி ஓடி விட்டார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

Related News