தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடையம் அருகே வேன் தீப்பிடித்து எரிந்து நாசம்

 

Advertisement

கடையம், பிப். 11: தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள முதலியார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ். இவர் சொந்தமாக வேன் வைத்து தொழில் செய்து வருகிறார். வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு மகேஷ் தனது வேனை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு தூங்க சென்றார். இந்நிலையில் நேற்று அதிகாலை 1.30 மணி அளவில் மகேஷின் வேன் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. அப்போது வீட்டை விட்டு வெளியே வந்த அவர், வேன் தீப்பிடித்து எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அம்பாசமுத்திரம் தீயணைப்பு நிலைய அலுவலர் பலவேசம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை முழுவதுமாக அணைத்தனர். இருப்பினும் வேன் முழுமையாக எரிந்து நாசமானது. இதுகுறித்து மகேஷ் கடையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து முன்விரோதம் காரணமாக யாராவது வேனுக்கு தீ வைத்தார்களா?, தொழில் போட்டியில் தீ வைக்கப்பட்டதா? பேட்டரியில் ஏற்பட்ட பழுதால் தீப்பிடித்ததா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Related News