வையாவூர் வெங்கடேசபெருமாள் கோயிலில் நீண்ட நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
Advertisement
இதனைத்தொடர்ந்து, காணும் பொங்கல் தினமான நேற்று ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பிரசன்ன வெங்கடேச பெருமானை வணங்கினர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய துறையின் இணை ஆணையர் குமரதுறை, உதவி ஆணையர் ராஜலட்சுமி, அறங்காவலர் குழு தலைவர் தினேஷ், முன்னாள் அறங்காவலர் ஏழுமலை, செயல் அலுவலர் மேகவண்ணன், தலைமை அர்ச்சகர் பாலாஜி பட்டச்சாரியார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அமுதா ஏழுமலை உள்ளிட்ட விழா குழுவினர் செய்திருந்தனர்.
Advertisement