தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஊத்துக்கோட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வாலிபர் பரிதாபமக பலியானார். ஊத்துக்கோட்டை அருகே செஞ்சியகரம் அருந்ததியர் காலனியில் வசித்து வந்தவர் மணிகண்டன்(28). கூலி தொழிலாளி. இவரும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனான சந்தோஷ் என்பவரும் ஊத்துக்கோட்டையில் இருந்து செஞ்சியகரம் பகுதிக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தனர். ஊத்துக்கோட்டை ரெட்டி தெரு சர்ச் அருகில் சென்றபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மணிகண்டனின் பைக் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் மணிகண்டன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் படுகாயமடைந்த சந்தோஷை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஊத்துக்கோட்டை போலீசார் இறந்த மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விபத்தில் சிக்கி படுகாயமடைந்த சந்தோஷ் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனர்.