தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நூறுநாள் வேலை வழங்கக் கோரி யூனியன் அலுவலகம் முற்றுகை

சாயல்குடி,ஏப்.25: கே.கருங்குளம் பஞ்சாயத்தில் நூறு நாள் வேலை வழங்கவில்லை என கூறி, யூனியன் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர். கடலாடி ஊராட்சி ஒன்றியம், கே.கருங்குளம் பஞ்சாயத்தில் உள்ள கே.கருங்குளம், பூதங்குடி, கே.கரிசல்குளம், இந்திரா நகர், நேதாஜி நகர், சமத்துவபுரம், ரைஸ்மில் தெரு ஆகிய கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கிராமங்களில் பஞ்சாயத்து சார்பாக நடக்கும் நூறுநாள் வேலை திட்டத்தில் பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த சில வாரங்களாக முறையாக வேலை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் வேலை வழங்கக்கோரி நேற்று கடலாடி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Advertisement

இதுகுறித்து பணியாளர்கள் கூறும்போது, கே.கருங்குளம் பஞ்சாயத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து சில வாரங்களாக முறையாக வேலை வழங்கவில்லை. தற்போது ஏப்ரல் மாதத்தில் புதிய நிதியாண்டுக்குரிய பணியும் வழங்கவில்லை. இதுகுறித்து பஞ்சாயத்து நிர்வாகத்திடம் கேட்டால், புதிய வேலைக்கு நிர்வாக அனுமதி வரவில்லை என கூறுகின்றனர். கோடைக்காலம் என்பதால் விவசாய வேலை கிடையாது. இந்தநிலையில் நூறுநாள் வேலையின்றி போதிய வருமானம் இல்லை. இதனால் குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே ஏழை மக்களின் குடும்ப வாழ்வாதாரத்திற்காக வேலை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Advertisement

Related News