தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரியில் ஒன்றியப் பேரவை தொடக்க விழா

மதுரை, ஜூலை 10: மதுரையில் உள்ள சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரியில், ஒன்றியப் பேரவை தொடக்க விழா நேற்று நடைபெற்றது. மதுரை, பெருங்குடியில் உள்ள நாடார் மகாஜன சங்கம் சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரி ஒன்றியப்பேரவை தொடக்க விழா நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டுத்துறைத்தலைவர் எம்.புஷ்பராணி வரவேற்றார்.

ஆலோசகர் முனைவர் ஜி.மாரிஸ்குமார் மாணவர் ஒன்றியத்தின் சிறப்புகள் குறித்து தலைமையுரை ஆற்றினார். கல்லூரி துணைத்தலைவர் டி.குழந்தைவேல் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் முன்னாள் செயற்குழு உறுப்பினர் செ.முருகேசன் கற்றலின் மேன்மை குறித்து விளக்கிப் பேசினார்.

இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் எம்.கவிதா மாணவர் மன்றத்தின் செயல்பாடுகள் குறித்தும், அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கியதுடன், 12 மாணவிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்து வாழ்த்தினார். பின்னர் செயற்குழு உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்றதை தொடர்ந்து அனைத்து மன்றத்தின் செயலாளர்களும் தங்கள் குழுக்களை அறிமுகம் செய்தனர்.

இதையடுத்து கல்லூரியில் செயல்பட்டும் மன்றங்கள் மற்றும் குழுக்கள் குறித்த அறிக்கை வாசிக்கப்பட்டது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவிப்பேராசிரியர் மற்றும் கல்வியியல் துறை முனைவர் கே.வெள்ளைச்சாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிறைவாக மாணவர் மன்ற தலைவி சர்மிளா பானு நன்றி கூறினார்.

 

Related News