தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மும்மொழி கொள்கை என்ற பெயரில் தமிழகத்தில் இந்தியை திணிக்கும் ஒன்றிய பாஜக அரசு

 

மயிலாடுதுறை, ஜூலை 4: மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்பு நடவடிக்கையை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது என்று மயிலாடுதுறையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் பேசினார்.

ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சார பொதுக்கூட்டம் திமுக சார்பில் மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் நடைபெற்றது. திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசும்பொழுது, ஒன்றிய பாஜக அரசு மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தி திணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறது. மூன்றாம் வகுப்பில் பொதுத் தேர்வு, ஐந்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எட்டாம் வகுப்பு பொது தேர்வு என மாணவர்களின் கல்வியில் பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வருகிறது, மும்மொழிக் கொள்கையை ஏற்காத காரணத்தால் தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய 2152 கோடி ரூபாய் ஒதுக்க முடியாது என ஆணவத்துடன் தெரிவிக்கின்றனர் என்று பேசினார். நிகழ்ச்சியில் ஏராளமான திமுக பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் பங்கேற்றனர்.