தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கல்லூரி மாணவர்களுக்கு போதை ஸ்டாம்ப் விற்ற வழக்கில் மேலும் 2 பேர் கைது

புதுச்சேரி, செப். 1: புதுவை கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவ கல்லூரி அருகே கடந்த ஜூன் மாதம் 29ம் தேதி கல்லூரி மாணவர்களுக்கு போதை ஸ்டாம்ப் விற்ற சேலம் பகுதியை சேர்ந்த கீர்த்திவாசனை (22) கோரிமேடு போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீசாரிடம் அவர் அளித்த தகவலின் அடிப்படையில் கோரிமேடு அருகே தனியார் விடுதியில் தங்கியிருந்த கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ஹைதர் (30), தலச்சேரியை சேர்ந்த முகமது பசல் (27) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் ரூ.25 லட்சம் மதிப்புள்ள 260 கிராம் கஞ்சா, 180 கிராம் ஹாஷிஷ் எண்ணெய் (கஞ்சா எண்ணெய்) மற்றும் 1616 எல்எஸ்டி (லைசரஜிக் அமிலம் டைதிலாமைடு) ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Advertisement

தொடர்ந்து போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் போதை ஸ்டாம்ப் விற்பனையில், மேலும் பல பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கோரிமேடு மற்றும் வடக்கு கிரைம் போலீசார் அவர்களை வலைவீசி தேடி வந்தனர். அப்போது பெங்களூரில் ஜவுளி வியாபாரம் செய்து கொண்டு, புதுச்சேரிக்கு போதை ஸ்டாம்ப் சப்ளை செய்து வந்த கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த முகமது அஜ்மல் (26), வயநாட்டை சேர்ந்த முகமது தாகீர் (31) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து கிரைம் போலீசார் அவர்களை பெங்களூரில் கைது செய்தனர். பின்னர் அவர்களை புதுச்சேரிக்கு அழைத்து வந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியை கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement

Related News