தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சுகாதார வழிமுறைகளை பின்பற்றாததால் கும்மிடிப்பூண்டி பகுதியில் இரண்டு கிளினிக் சீல்: மாவட்ட சுகாதார இணை இயக்குனர் அதிரடி

கும்மிடிப்பூண்டி, ஜூன் 5: சுகாதார வழிமுறைகளை பின்பற்றாததால் கும்மிடிப்பூண்டி பகுதியில் 2 கிளினிக்குகளுக்கு மாவட்ட சுகாதார இணை இயக்குனர் அதிரடியாக சீல் வைத்தார். கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டி, எளாவூர், பெத்திகுப்பம், ஆரம்பாக்கம், சுண்ணாம்புகுளம், மாதர்பாக்கம், சாமிரெட்டிகண்டிகை, பூவலம்பேடு, உள்ளிட்ட பகுதிகளில் போலி மருத்துவர்கள், போலி கிளினிக்குகள், போலி மெடிக்கல் ஷாப் இயங்கி வருவதாகவும், அதில் ஒரு சிலர் செவிலியரை வைத்துக்கொண்டு மருத்துவம் பார்த்து உயிரிழப்பு ஏற்படுத்துவதாகவும் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் முதலமைச்சர் தனிப்பிரிவு அலுவலகத்திற்கு தொடர்ந்து 17 மனுக்கள் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட சுகாதார இணை இயக்குனர் அம்பிகா சண்முகம் மற்றும் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனை மருத்துவர் பிரியதர்ஷினி, சப் இன்ஸ்பெக்டர் பாபு, தனிப்பிரிவு போலீசார் ராமதாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் திடீரென கும்மிடிப்பூண்டி சிப்காட் பைபாஸ் பகுதியில் உள்ள 2 மருத்துவமனைகளில் நேற்று சோதனை மேற்கொண்டனர். சோதனையின்போது முறையான டாக்டர்கள், செவிலியர்கள், மருந்துக்கூடம், சுகாதார இயக்கத்தின் சார்பாக வழிகாட்டு முறைகள் ஆகியவை பின்பற்றப்படாமல் மருத்துவமனை செயல்பட்டது தெரிய வந்தது.

இது சம்பந்தமாக 2 தனியார் கிளினிக்குகளுக்கு அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல் பெத்திகுப்பம், சாமி ரெடி கண்டிகை, முனுசாமி நகர், கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் உள்ள சில தனியார் மருத்துவமனைகள் சுகாதார வழிகாட்டு முறைகளை பின்பற்றாமல் செயல்பட்டு வருகின்றன என்றும், இதன் காரணமாக இப்பகுதியைச் சேர்ந்த ஏழை எளிய மக்களுக்கு தரமற்ற மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், இதனை முறையாக சோதனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related News