தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சாமி சிலை சேதப்படுத்தியதை தட்டிகேட்ட பேரூராட்சி ஊழியர் மீது தாக்குதல் 2 பேர் கைது

கன்னியாகுமரி, ஜூலை 8 : கன்னியாகுமரி அருகே கொட்டாரம் அச்சன்குளம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (60). கொட்டாரம் பேரூராட்சி அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய குடும்ப கோயில் செல்வன்புதூரில் உள்ள மங்கம்மாள் சாலையில் உள்ளது. இந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கோயிலில் உள்ள சுடலைமாடன் சாமி சிலைகள் புதியதாக பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில் நேற்று கோயிலில் இருந்த சிலையை அச்சன்குளத்தை சேர்ந்த நாகராஜன் மகன் அனீஸ் (19), அதே பகுதியை சேர்ந்த பாரத் (19) ஆகியோர் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த சுப்பிரமணியன் 2 வாலிபர்களையும் தட்டி கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் கம்பியால் சுப்பிரமணியனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து தாக்குதலில் காயம் அடைந்த சுப்பிரமணியன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் இது குறித்து அவர் கன்னியாகுமரி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் எஸ்.ஐ. எட்வர்ட் பிரைட் வழக்குப்பதிந்து அனீஷ், பாரத் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related News