தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் கோழியாளம் கிராமத்தில் பிறந்த இரட்டைமலை சீனிவாசன் அரசியல்வாதி, சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர், வழக்கறிஞர், ஆதிதமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்தவர். சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராக 1923 முதல் 1939ம் ஆண்டு வரை இருந்துள்ளார். இவரது 166வது பிறந்தநாள் விழா செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட தேசிய நெஞ்சாலையில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் நேற்று காலை நடந்தது. இந்நிகழ்ச்சியில் கலெக்டர் சினேகா கலந்துகொண்டு இரட்டைமலை சீனிவாசன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் ரம்யா, செங்கல்பட்டு மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இராமகிருஷ்ணன், வட்டாட்சியர் பாலாஜி, பேரூராட்சி செயல் அலுவலர் அருள்குமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் இதேபோன்று திருப்போரூர் தொகுதி விசிக எம்எல்ஏ பாலாஜி கலந்துகொண்டு இரட்டைமலை சீனிவாசன் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதேபோன்று மதுராந்தகம் தொகுதி அதிமுக கட்சி எம்எல்ஏ மரகதம் குமரவேல், இரட்டைமலை சீனிவாசன் மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஒன்றிய நகர பேரூர் அதிமுக கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் அப்போது உடன் இருந்தனர். மேலும், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட விசிக கட்சி சார்பில் கோழியாளம் கிராமத்தில் மாவட்டச் செயலாளர் பொன்னிவளவன் தலைமையில் அக்கட்சியினர் ஊர்வலமாக சென்று இரட்டைமலை சீனிவாசன் உருவ சிலைக்கு மாலை அணிவித்து பிறகு நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் மாநில செயலாளர் அன்புச்செல்வன், கட்சி நிர்வாகிகள் அம்பேத்கர் பித்தன், நூர்ஜகான், ஜெயந்தி, ஆதித்தமிழன், வீரா, உதயா, சீனு, அசோக், தமிழரசன், நரேஷ், கேசவன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.மேலும் இதேபோன்று அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றிய விசிக கட்சி சார்பில் இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் விழா கோழியாளத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் ஒன்றிய செயலாளர் தயாநிதி ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு, மாவட்ட செயலாளர்கள் தமிழினி, எழிலரசன், தென்னவன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஆதவன், மாவட்ட நிர்வாகிகள் கலை கதிரவன், பேரறிவாளன், விஜயகுமார், வேலவன், ஒன்றிய செயலாளர்கள் பன்னீர்செல்வம், கதிர்வாணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.

 

Related News