தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்துஸ்தான் கல்லூரியில் சுனாமி விழிப்புணர்வு நிகழ்ச்சி

 

Advertisement

திருப்போரூர்,நவ.11: சென்னையை அடுத்த படூரில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுனாமி விழிப்புணர்வு தின நிகழ்ச்சி கொண்டாடப் பட்டிருந்தது. கல்லூரி முதல்வர் உத்திரா வரவேற்றார். கல்லூரி இயக்குனர் சூசன் வர்கீஸ் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் இயற்கைப் பேரிடர்களிலிருந்து கடலோரப் பகுதிகளைக் காக்கும் சதுப்புநிலக் காடுகளை பாதுகாத்தல், சதுப்பு நிலங்களின் முக்கியத்துவம், கடலோரப் பகுதிகளை வளமாக்குதல், மண்ணரிப்பைத் தடுத்தல், கார்பன் வரிசைப்படுத்துதல் ஆகியவற்றில் சதுப்புநிலங்களின் பங்கு ஆகியவை குறித்து பேராசிரியர்கள் சாமுவேல் சுகுமார் மற்றும் வின்சென்ட் ஆகியோர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை ரோட்டரி சங்கத்தின் பேரிடர் மேலாண்மை பிரிவுத் தலைவர் சாய் கிருஷ்ணா சுனாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றிப் பேசினார். இதைத் தொடர்ந்து சதுப்புநில மரங்களை நடுதலிலும் பாதுகாத்தலிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட மாங்குரோவ் கிளப் எனப்படும் சதுப்புநிலச் சங்கம் என்னும் அமைப்பு தொடங்கப்பட்டது. மேலும், அறிவியல் புல முதன்மையர் சி.எலிசபெத் ராணி தொகுத்த “கடலோர நிலப் பாதுகாவலர்களை மீட்டெடுத்தல் : சதுப்புநில மறுசீரமைப்பிற்கான விரிவான வழிகாட்டி” என்னும் நூல் வெளியிடப்பட்டது.

Advertisement

Related News