தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கருங்கலில் மது பாராக மாறிய வேன் ஸ்டாண்ட் குடிமகன்களை விரட்டி பிடித்து கைது செய்த அதிரடிப் படையினர்

கருங்கல், ஜூலை 2 : கருங்கலில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி பொதுமக்கள் பஸ்சில் செல்ல வசதியாக நுழைவுவாயில் மற்றும் வெளியில் செல்லும் பகுதியில் பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி மார்த்தாண்டம் செல்லும் சாலையில் ஒரு பஸ் நிறுத்தமும், புதுக்கடை சாலையில் மற்றொரு பஸ் நிறுத்தமும் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கட்டுமான பணிகள் நடப்பதால் பஸ் நிலையம் வழியாக பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அப்பகுதியில் உள்ள வேன் ஸ்டாண்ட் வழியாக 2 பஸ் நிறுத்தங்களுக்கும் சென்று வருகின்றனர். இதற்கிடையே வேன் ஸ்டாண்ட் அருகே டாஸ்மாக் கடை உள்ளது.

இங்கு வரும் மதுப்பிரியர்கள் மதுவை வாங்கி வந்து வேன் ஸ்டாண்டில் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய பகுதியில் அமர்ந்து மது குடித்தனர். இதனால் அப்பகுதி மாலையில் பார் போல் செயல்பட்டது.இது குறித்து மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. எஸ்பி உத்தரவின் பேரில் அதிரடிப்படை போலீசார் அந்த பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை கண்டதும் குடிமகன்கள் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். இருப்பினும் போலீசார் 4 பேரை விரட்டி பிடித்தனர்.பின்னர் அவர்களை கருங்கல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related News