தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெரியதாழை சிறுமலர் பள்ளியில் முப்பெரும் விழா

சாத்தான்குளம், ஜூன் 23: சாத்தான்குளம் அருகே பெரியதாழை சிறுமலர் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பு துவக்க விழா, 12 மரக்கன்றுகள் நடும்விழா, புதிய வகுப்பறைகள் மற்றும் சத்துணவுக்கூடம் திறப்பு விழா என முப்பெரும் விழா நடந்தது. முன்னதாக புதிய பள்ளி கட்டிடத்தின் மேடையில் பங்குத்தந்தையும், உதவி பங்குத்தந்தையும் இணைந்து சிறப்பு திருப்பலி நடத்தினர். தொடர்ந்து நடந்த முப்பெரும் விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி தலைமை வகித்தார். தெரு கமிட்டி தலைவர்கள், நிதி குழுவினர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தாளாளர் தந்தை சுசிலன் வரவேற்றார்.

Advertisement

இதைத் தொடர்ந்து புதிய கட்டிடத்தில் முன்பாக 12 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதைத்தொடர்ந்து இரு புதிய வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் சத்துணவுக்கூடம் ஆகியவற்றை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, தாளாளர் தந்தை சுசிலன் ஆகியோர் திறந்து வைத்தனர். இதையொட்டி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவ- மாணவிகள், பெற்றோர், ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். தலைமை ஆசிரியை மேரி திலகவதி நன்றி கூறினார்.

Advertisement

Related News