துறையூர் நகராட்சியில் 23 வார்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம்
துறையூர், அக். 31: துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட 23 வார்டுகளக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ஏராளமானோர் மனுக்களை அளித்தனர். திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட துறையூர் நகராட்சி 23 வார்டுகளுக்கு தனியார் பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. முகாமை துறையூர் நகர்மன்ற தலைவர் செல்வராணி மலர் மன்னன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார்.
முகாமில் ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த்துறை மற்றும் பேரிடர் துறை, கால்நடை பராமரிப்பு, மின்சாரத்துறை, காவல்துறை, மாற்றுத் திறனாளி நலத்துறை என 25 துறையை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர். அம்முகாமின் வாயிலாக துறையூரில் நகராட்சியில் உள்ள 23 வார்டு பொதுமக்கள் பயன்பெற்றனர். நிகழ்ச்சியில் துறையூர் தாசில்தார் சிவகுமார், நகர மன்ற உறுப்பினர் வீரமணிகண்டன், கார்த்திகேயன், முத்து மாங்கனி பிரபு, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
