தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

துவரங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் நாவல் மரக்கன்று நடும் விழா

துவரங்குறிச்சி, செப்.25: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி வனத்துறை சார்பில் துவரங்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 300க்கும் மேற்பட்ட நாவல் மர கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவில் துவரங்குறிச்சி திமுக நகரச் செயலாளர் நாகராஜ், மரக்கன்றுகளை நட்டு விழாவை தொடக்கி வைத்தார்.

Advertisement

அதைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் அபுதாகிர், அம்மையப்பன் மற்றும் இருபால் ஆசிரியர்கள் வளாகத்தை சுற்றிலும் நாவல் மரக்கன்றுகளை நட்டு அதற்கு தண்ணீர் விட்டனர். அதை தொடர்ந்து வனச்சரக அலுவலர் சரவணகுமார் பள்ளி மாணவர்களிடம் மரம் வளர்ப்பது நாளைய சந்ததிகளின் எதிர்காலத்தை எவ்வகையில் காக்கும் என்றும், இதனால் எவ்வளவு பயன்கள் கிடைக்கும் என்றும் எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் வனவர் பெரியசாமி, வனக்காப்பாளர்கள், வன காவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Advertisement

Related News