தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

துறையூர் அருகே பருவ மழை காரணமாக நிரம்பி வழியும் ஆலத்துடையான்பட்டி ஏரிகள்

துறையூர், அக். 24: துறையூர் அருகே ஆலத்துடையான் பட்டி பெரிய ஏரி, சின்ன ஏரி முழு கொள்ளளவு எட்டியதை தொடர்ந்து நிரம்பி வழிந்தது. திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆலத்துடையான் பட்டியில் சின்ன ஏரி, பெரிய ஏரி உள்ளது. பெரிய ஏரியின் பரப்பளவு 218 ஏக்கர் கொண்டது. வடகிழக்கு பருவ மழை ஆரம்பித்து கொல்லிமலை நீர் பிடிப்பு பகுதியில் கனமழை காரணமாக புளியஞ்சோலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Advertisement

இதன் காரணமாக ஆலத்துடையான் பட்டி பெரிய ஏரி நிரம்பி வழிந்தது. இந்த ஏரியில் நிரம்பி வழியும் தண்ணீரானது சின்ன ஏரிக்குச் சென்றடைந்தது. தொடர்ந்து தண்ணீர் வரத்தின் காரணமாக சின்ன ஏரியும் நிரம்பி வழிகிறது. சின்ன ஏரி நிரம்பி வழிவதை தொடர்ந்து, அங்கிருந்து செல்லும் தண்ணீர் ரெட்டியாப்பட்டி ஏரிக்கு செல்கிறது.

இதனால் இப்பகுதியில் 1000 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்யும் விவசாயிகள் மற்றும் கால்நடை வைத்திருப்போர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பருவமழை ஆரம்பித்த உடனே ஆலத்துடையான் பட்டி பெரிய ஏரி, சின்ன ஏரி நிரம்பி வழிந்ததால் மீண்டும் பலமுறை நிரம்பி வழியும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

Advertisement