தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மின்சாரம் தாக்கி வெல்டர் பரிதாப பலி

முசிறி,ஆக.22: திருச்சி அருகே வெல்டிங் செய்த போது மின்சாரம் தாக்கி வெல்டர் பரிதாபமாக உயிரிழந்தார். திருச்சி மாவட்டம் தொட்டியம் கோட்டைமேடு கீழத்தெருவை சேர்ந்த கிருஷ்ணன் மகன் கண்ணன் (45). வெல்டரான இவர், அதே பகுதியை சேர்ந்த தினேஷ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக மேற்கூரை அமைப்பதற்கு வெல்டிங் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை வெல்டிங் அடித்த போது எதிர்பாராத விதமாக கண்ணன் மீது மின்சாரம் தாக்கியது. இதில் அவர் சுருண்டு கீழே விழுந்துள்ளார்.

Advertisement

உடனே அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தொட்டியம் சப்.இன்ஸ்பெக்டர் வரதராஜ பெருமாள் சம்பவ இடத்திற்கு சென்று கண்ணன் உடலை கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொட்டியம் பகுதியில் மின்சாரம் தாக்கி ஊழியர் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Advertisement