தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவெறும்பூர் அருகே காட்டூர் அரசு பள்ளியில் புதிய சத்துணவு கட்டிடம்

திருவெறும்பூர், நவ. 21: திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு திட்டம் 25வது நிதியாண்டில் கட்டப்பட்ட புதிய சத்துணவு கட்டிடத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று திறந்து வைத்தார். திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில் ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது.

Advertisement

இப்பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அந்த பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு தயாரிப்பதற்கு உரிய சமையல் கூடம் இல்லாமல் இருந்து வந்தது. இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷிடம் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கி புதிதாக வைப்பறையுடன் கூடிய சமையல் கட்டிடம் கட்டப்பட்டது.

இதனை நேற்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா, திமுக மாநகர செயலாளர் மதிவாணன், காட்டூர் பகுதி செயலாளர் நீலமேகம், மாமன்ற உறுப்பினர் தாஜூதீன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

Advertisement

Related News