திருச்சியில் 21ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்
Advertisement
திருச்சி, நவ.18: திருச்சி மாவட்டத்தில் இம்மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 21ம் தேதிகாலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு நீர்ப்பாசனம், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை சம்மந்தப்பட்ட கடனுதவிகள் மற்றும் விவசாய மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் குறித்து நேரிலோ, மனுக்கள் மூலமாகவோ தெரிவிக்கலாம். மேலும் விவசாயிகள் இவ்வாய்ப்பினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Advertisement