தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிகரெட் திருடிய 2 சிறுவர்கள் கைது

சமயபுரம், அக். 17: திருச்சி அருகே மளிகை கடை பூட்டை உடைத்து சிகரெட் திருடிய 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள மேலகல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன்(48). கல்பாளையம் மெயின் ரோட்டில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த 13 ம் தேதி இரவு 10 மணியளவில் சரவணன் வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் அதிகாலை 5 மணிக்கு கடையை திறக்க வந்த போது, கடை ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

Advertisement

உள்ளே மேஜை டிராயரில் இருந்த ரூ.2 ஆயிரம் பணம் மற்றும் விற்பனைகாக வைத்திருந்த 5 பாக்ஸ் சிகரெட் திருட்டு போயிருந்தது. இதுகுறித்து சரவணன் மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்பகுதியை சேர்ந்த 2 சிறுவர்கள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இது தொடர்பாக 2 சிறுவர்களையும் போலீசார் பிடித்து, அவர்களிடம் இருந்து ரூ.,2000 பறிமுதல் செய்தனர். பின்னர் சிறுவர்களின் பெற்றோர்களை போலீசார் அழைத்து, அவர்களுக்கு அறிவுரை வழங்கி, சிறுவர்களை அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.

 

Advertisement