தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சம்பா சாகுபடி விறுவிறுப்பு மணப்பாறை அருகே கிணற்றில் தவறி விழுந்த குள்ளநரி பத்திரமாக மீட்பு

மணப்பாறை, அக்.9: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கிணற்றில் தவறி விழுந்த குள்ளநரி, நேற்று தீயணைப்புத்துறை வீரர்களால் பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டது.மணப்பாறை அடுத்த வெள்ளைக்கல் காசாநகரை சேர்ந்தவர் கோபால் மகன் இளையராஜா(32). இவர் கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று காலை அவருக்கு சொந்தமான சுமார் 80 அடி ஆழ கிணற்றில் 60 அடி வரை தண்ணீர் இருந்த நிலையில், அருகே வீரமலை பகுதியிலிருந்து வழிதவறி வந்த குள்ள நரி ஒன்று தவறி கிணற்றில் விழுந்துள்ளது. கிணற்றில் தவறி விழுந்த நரி, கிணற்றின் உள்சுவர் பகுதியின் திட்டில் சுற்றி சுற்றி ஓடி வந்து கிணற்றுலிருந்து வெளியேற முயன்றது. ஆனால் கிணற்றில் சுவர் சுமார் 10க்கு மேல் இருந்ததால் நரியால் வெளியே செல்ல முடியாமல் தவித்துக்கொண்டிருந்தது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற மணப்பாறை வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள், நரியை பிடிக்க முயன்றனர். ஆனால் கிணற்றின் திட்டில் ஓடிஓடி சென்ற நரி, கிணற்றின் நீர் மட்டத்திலிருந்த மோட்டார் அறையின் அடிப்பகுதியில் சென்று பதுங்கியது. சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு தண்ணீரில் விழுந்து தத்தளித்த நரியை தீயணைப்புத்துறை வீரர்கள் லாவகமாக தூண்டி மூலம் பிடித்து மேலே கொண்டு வந்தனர். நரியின் கழுத்திலிருந்து தூண்டி அவிழ்க்கப்பட்ட அடுத்த வினாடி தீயணைப்புத்துறை வீரர்கள் பிடியிலிருந்து தப்பித்து குள்ளநரி அருகிலிருந்த வனப்பகுதியினை நோக்கி ஓடி மறைந்தது.

Advertisement

Advertisement