தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரங்கம் கோயில் காணிக்கை 1.05 கோடி

திருச்சி, அக்.9: ரங்கம் ரங்கநாதர் கோயில் காணிக்கையாக ரூ.1 கோடியே 5 லட்சத்து 15 ஆயிரம் பெறப்பட்டுள்ளது. 108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதுமான ரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலில் தினமும் தமிழ்நாடு, வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வருகை தரும் பக்தர்கள் கோயிலில் வைக்கப்பட்டிருக்கும் உண்டியல்களில் தங்கள் காணிக்கைகளை செலுத்திவிட்டு செல்கின்றனர். அந்த காணிக்கைகள் பிறதி மாதம் கோயில் நிர்வாகம் சார்பில் எண்ணப்பட்டு கோயில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். அந்த வகையில் நேற்று கோயிலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து உண்டியல்களும் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டது. இதில் கோயில் பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதில் ரூ.1 கோடியே 5 லட்சத்து 15 ஆயிரத்து 905 காணிக்கையாக பெறப்பட்டது. மேலும் தங்கம் 133.1 கிராம், வெள்ளி 2 ஆயிரத்து 321 கிராம் மற்றும் 304 கரன்சிகள் பெறப்பட்டது. இந்த உண்டியல் எண்ணும் பணியின்போது கோயில் இணை ஆணையர் சிவராம் குமார் மற்றும் கோயில் பணியாளர்கள் இருந்தனர்.

Advertisement

Advertisement