கோவில்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
துவரங்குறிச்சி, ஆக.9: திருச்சி மாவட்டம் கோவில்பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதில் மொத்தம் 771 மனுக்கள் பெறப்பட்டன. இந்த முகாமில் கன்னிவடுகபட்டி, ஆமணக்கம்பட்டி, பளுவஞ்சி, பிராம்பட்டி, வகுத்தாழ்வார்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்கள் அளித்தனர். முகாமில் இப்போது சேர்ந்த பொதுமக்கள் சுமார் 771 பேர் மனு அழைத்திருந்தனர். இதில் 28 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
மீதமுள்ள 743 அணுக்கள் பரிசீலனையில் உள்ளன. மேலும் மருத்துவ துறையில் இருந்து கர்ப்பிணி பெண்களுக்கு இலவச ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டன.இம்முகாமில் ஊரக வளர்ச்சி துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, மின்சாரத்துறை, காவல் துறை. உள்ளிட்ட 20 துறைகள் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.மேலும் இந்நிகழ்வில் துணை கலெக்டர் ஜான் பீட்டர், மருங்காபுரி தாசில்தார் பாலகாமாட்சி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிஜஸ்டண்ட் ஜோ, சக்திவேல், ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், பழனியாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.