தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

துவரங்குறிச்சி அருகே குடியிருப்பில் அட்டகாசம் செய்த குரங்குகள்

துவரங்குறிச்சி, நவ. 7: வீட்டுக்குள் புகுந்து உணவு பொருட்களை தின்று அட்டகாசம் செய்து வந்த குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து சென்றதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த சொக்கநாதபட்டி, யாகபுரம் மற்றும் நல்லூர் ஆகிய பகுதிகளில் குரங்குகளின் அட்டகாசம் அதிகமானது. வீட்டுக்குள் புகுந்து விடும் குரங்குகள் உணவு பொருட்களை தின்பதோடு, அதனை வீணடிப்பது, பெண்கள், குழந்தைகளை அச்சுறுத்துவது என குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.

Advertisement

இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையிடம் குரங்குகளை பிடித்து வேறு பகுதிக்கு கொண்டு சென்று விட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையின் காரணமாக வனச்சரக அலுவலர் சரவணகுமார் மற்றும் வனவர் பெரியசாமி தலைமையில் வனப் பணியாளர்கள் கிராமப்புற பகுதிகளில் கூண்டு வைத்து குரங்குகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். வனத்துறையினர் வைத்த கூண்டுக்குள் 19 குரங்குகள் சிக்கியது. கூண்டுக்குள் சிக்கிய குரங்குகளை பாதுகாப்பான முறையில் எடுத்து சென்று, அடர்ந்த வனப்பகுதியில் வனத்துறையினரால் விடப்பட்டது.

 

Advertisement

Related News