தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவெறும்பூர் அருகே லாரி மீது அரசு பேருந்து மோதி டிரைவர் படுகாயம்

திருவெறும்பூர், நவ.5: திருவெறும்பூர் கணேசா மேம்பாலத்தில் செங்கல் லாரி மீது அரசு டவுன் பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் டிரைவர் படுகாயம் அடைந்தார். திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து துவாக்குடிக்கு, அரசு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது. அரசு பஸ்சை நம்பர் ஒன் டோல்கேட் மாருதி நகர் பகுதியை சேர்ந்த மதுரை வீரன் என்பவரின் மகன் ஜெகன்மோகன் ஓட்டிச்சென்றார். திருவெறும்பூர் கணேசா புதிய மேம்பாலத்தில் பஸ் சென்று கொண்டிருந்த போது, தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்த செங்கல் லாரியின் பின்புறம் மோதியது.

Advertisement

இதனால் அரசு பஸ்சின் முன்புறம் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் பஸ் டிரைவர் ஜெகன் மோகன் இடிபாடுகளுக்குள் சிக்கி கால் முறிவு ஏற்பட்டது. பொதுமக்கள் அவரை மீட்க முயன்றனர். ஆனால் முடிய வில்லை. இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் மீட்பு படையினர் அங்கு வந்து இடிபாடுகளுக்குள் சிக்கி தவித்த பஸ் டிரைவரை மீட்டனர். பின்னர் ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனையில் கொண்டு சென்று டிரைவர் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

 

Advertisement

Related News