தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

துவரங்குறிச்சி, மணப்பாறையில் கனமழை கொட்டி தீர்த்தது

துவரங்குறிச்சி, அக்.4: துவரங்குறிச்சி வையம்பட்டி, மணப்பாறை பகுதிகளில் திடீரென இடி மின்னலுடன் கொட்டித் தீர்த்த கனமழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி , மணப்பாறையில் நேற்று காலை முதல் மாலை வரை வெப்பத்தின் தாக்கம் அதிகளவில் இருந்தது. வெப்பக்காற்று வீசியதால் மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகினர்.

Advertisement

இந்நிலையில் நேற்று இரவு திடீரென மழை பெய்யத் தொடங்கியது. சிறிது நேரத்தில் இடி, மின்னல் காற்றுடன் கனமழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. மணப்பாறை, வையம்பட்டி, துவரங்குறிச்சி, ஆலத்தூர், மலையடிப்பட்டி, தாமஸ் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இந்த கனமழை நீடித்தது.

இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பேருந்து நிலையம் முன்பு தாழ்வான பகுதியில் மழைநீர் குளம்போல் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகினர். மேலும் திடீரென பெய்த மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், சம்பா விவசாய பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு இம்மழை பேருதவியாக இருந்தது.

 

Advertisement

Related News