தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் திருச்சி எம்பி துரைவைகோ ஆய்வு

திருச்சி, மே 20: ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் திருச்சி எம்பி துரைவைகோ நேற்று ஆய்வு செய்து மக்களிடம் அங்கு தேவையான கூடுதல் வசதிகள் குறித்து கேட்டறிந்து, சம்மந்தப்பட்ட துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார். திருச்சி, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை அப்பகுதி மக்களின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. தினசரி சுமார் 2 ஆயிரம் மக்கள் வரை ஸ்ரீரங்கம் அரசு மருத்தவமனையில் சிகிச்சைக்கு வருகை தருகின்றனர். இந்த நிலையில் திருச்சி எம்பி துரைவைகோ நேற்று ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை அலுவலர்கள் மற்றும் மக்களிடம் அங்கு கூடுதலாக தேவைப்படும் மருத்துவவசதிகள், மருத்துவ உபகரணங்கள்,

Advertisement

படுக்கை வசதிகள் மருத்துவ பொருட்களை சேமித்து வைக்க தேவையான கட்டிட வசதிகள், மருத்துவமனையில் உள்ள கழிவுநீர் வடிகால் பிரச்னைக்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், மற்றும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் போன்றவற்றை கேட்டறிந்தார். ஸ்ரீரங்கத்தில் அரசு மருத்துவமனை அருகே புதிய பஸ் நிலையம் வர இருப்பதால் அந்த சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிா்த்து ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருவோருக்கு ஏதுவாக வசதிகளை ஏற்பாடு செய்து தர சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள், அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து நிறைவேற்றி தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மக்களிடம் கூறினார்.

வேலைவாய்ப்பு உயரும்

திருச்சி மாநகரில் பயன்படுத்த கூடிய இடங்களை மாநகராட்சி நேரில் ஆய்வு செய்து, எந்த இடத்தில் எப்படிபட்ட தளங்களை உருவாக்கலாம் என்ற ஒரு விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்து, விரைவில் அதை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். அதேபோல் அவற்றை பராமரிப்பதற்கு அதை பயன்படுத்தும் பொதுமக்களிடம் இருந்து ஒரு கணிசமான கட்டணத்தை நிர்ணயித்து மாநகராட்சி பெற்றுக்கொள்ளலாம். மேலும் இந்த இடங்களை பயன்படுத்துவதால் வேலை வாய்ப்பையும் உருவாக்கி கொடுக்கலாம் என்று கூறுகின்றனர்.

Advertisement

Related News