தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருச்சி மாரிஸ் தியேட்டர் ரயில்வே மேம்பால கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும்

திருச்சி, ஏப்.28: தமிழ்நாடு உபயோகிப்பாளர் குழுவின் வருடாந்திர பொதுக்கூட்டம் மற்றும் 2025-27ம் ஆண்டுக்குரிய புதிய நிர்வாகிகள் தேர்வு திருச்சி ஒய்டபிள்யுசிஏ-வில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு குழுத்தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார். கூட்டத்தில் காஷ்மீர் தீவிரவாதத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. குழுவின் மூத்த உறுப்பினரான சுப்ரமணியபுரம் கோபாலகிருஷ்ணன் (105) மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. குழு செயலாளர் பேராசிரியர் புஷ்பவனம் ஆண்டறிக்கை வாசித்தார்.

Advertisement

தொடர்ந்து 2025-27ம் ஆண்டுகளுக்கான நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில், தலைவராக செல்வகுமார் துணை தலைவராக சேகர், செயலாளராக பேராசிரியர் புஷ்பவனம், இணைச் செயலாளராக லட்சுமி, பொருளாளராக மொஹமட் ஈசாக் ஆகியோரும், செயற்குழு உறுப்பினர்களாக, ரவீந்திரன், சந்திர சேகரன், வெங்கடராமன், ஜெயராமன், ரபீந்திரன், உப்பிலி கோதண்டராமன் மற்றும் வைத்தீஸ்வரன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.

தொடர்ந்து நடந்த ஆண்டுக் கூட்டத்தில் விடுக்கப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

கல்லூரிகளுக்கு உள்ளது போன்று பள்ளிக்கூடங்களின் தரத்தை ஆய்வு செய்து அறிவிக்க, ஒன்றிய மாநில அரசுகளின் உதவியோடு சுதந்திரமான தன்னாட்சி பெற்ற ஒரு குழுவை அமைக்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கான பள்ளிகளை தேர்வு செய்ய இத்திட்டம் பயனளிக்கும். மேலும் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தவும், இத்தரவரிசை உதவியாக இருக்கும். ஒரு ஆண்டுக்கும் மேலாக நடந்து வரும் திருச்சி மாரிஸ் தியேட்டர் ரயில்வே மேம்பால கட்டுமானப் பணியை (சாலை ரோடு) பொது மக்கள் நலன் கருதி விரைவில் கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக ஓய்வு பெற்ற மின்சார வாரிய துணை முதன்மை பொறியாளர் வெங்கடராமன் வரவேற்றார். பேராசிரியர் ராஜா முத்திருளாண்டி, னிவாசன், ரங்காச்சாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் லட்சுமி நன்றி தெரிவித்தார்.

Advertisement

Related News