தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதிய அனுபவ நிகழ்ச்சிக்காக விமானத்தில் சென்னை சென்ற 36 மாற்றுத்திறன் மாணவர்கள்

திருச்சி, நவ.26: புதிய அனுபவ நிகழ்ச்சிக்காக தஞ்சையை சேர்ந்த 36 மாற்றுத்திறன் மாணவர்களை திருச்சி கலெக்டர் சரவணன் வரவேற்று சென்னைக்கு விமானம் மூலம் அனுப்பி வைத்தார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் வரும் டிச.3ம்தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு புதிய அனுபவம் அளிக்க சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும். இந்த ஆண்டு உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி தஞ்சாவூர் மாவட்ட அரசு பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் குறையுடையோர் அரசு சிறப்பு பள்ளி மாணவர்களை விமானத்தில் சென்னை அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

11ம் வகுப்பு பயின்று வரும் மாணவா்களை பாதுகாவலருடன் திருச்சி விமான நிலையத்திலிருந்து, விமானம் மூலம் சென்னை அழைத்து சென்று மெட்ரோ ரயில் அனுபவம், திரையரங்கத்தில் திரைப்படம் காணவைக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று வருகை தந்த தஞ்சாவூர் மாவட்ட அரசு சிறப்பு பள்ளியை சேர்ந்த 17 மாணவர்கள், 4 பார்வைத்திறன் சிறப்பாசிரியா்கள், செவித்திறன் குறையுடையோருக்கான பள்ளியின் 10 மாணவா்கள், 3 மாணவியா்கள், 2 சிறப்பாசிரியா்கள் என மொத்தம் 36 மாணவ, மாணவியா்களை திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணன் வரவேற்று, அவர்களை சென்னைக்கு வழியனுப்பி ைவத்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா்கள் அருள் பிரகாசம் (தஞ்சாவூர்), ரவிச்சந்திரன் (திருச்சி) மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

Advertisement