தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கீழக்குறிச்சி பகுதியில் அறுவடைக்கு தயாரான குறுவை நெற்பயிர் முளைக்க துவங்கியது

திருவெறும்பூர், அக்.26: திருவெறும்பூர் அருகேயுள்ள கீழக்குறிச்சி பகுதியில் அறுவடைக்கு தயாரான குறுவை நெல்மணிகள் மழைநீரில் மூழ்கி முளைப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துனர்.திருவெறும்பூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சில தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகின்றன.இந்நிலையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கீழக்குறிச்சி பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் குருவை சாகுபடிக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது.

Advertisement

மழைநீர் வடிய முறையான வடிகால் வசதிகள் இல்லாததால் தேங்கி நின்ற மழைநீரில் நெற்பயிர்கள் சாய்ந்து முளைத்து வருகின்றன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர்.ஏக்கருக்கு ரூ.25ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை செலவு செய்து குருவை சாகுபடிக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் செய்வறியாது தவித்து வருகின்றனர். அதேபோல் நீரில் மூழ்கிய பயிர்களை இதுவரை எந்த அதிகாரியும் வந்து ஆய்வுக்கு செய்யவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.மேலும் இந்த பாதிப்பு குறித்து அதிகாரிகள் உரியஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement