தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவெறும்பூர் பகுதியில் இயந்திர நடவு செய்த 1000 ஏக்கர் சம்பா பயிர் தண்ணீரில் மூழ்கியது

திருவெறும்பூர், அக்.25: திருவெறும்பூர் சுற்றுவட்ட பகுதியில் இயந்திரத்தில் நடவு செய்த சுமார் 1000 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளதால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் மழைநீர் ஆங்காங்கே தேங்கி விவசாய நிலங்களையும், குடியிருப்புகளையும் பாதித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே விளக்கு கூத்தைப்பார், பத்தாளப்பேட்டை, நடராஜபுரம், அரசன்குடி, வேங்கூர் உள்ளிட்ட பகுதிகளில் தற்பொழுது நடவு செய்யப்பட்டுள்ள சம்பா ஒரு போக நெற்பயிர்களில் சுமார் 1000 ஏக்கர் சம்பா ஒரு போக நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.

Advertisement

இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். நெற்பயிர்கள் இளம் பயிர்களாக இருப்பதால் ஒன்று இரண்டு நாட்கள் மட்டுமே தாக்கு பிடிக்கும் என்றும், அதற்கு மேல்தண்ணீர் வடியாமல் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி இருந்தால் அழுகும் சூழ்நிலை உருவாகும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் மலை வெள்ள நீரில் மூழ்கியுள்ள சம்பா நெற்பயிர்களை காப்பாற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News